2.3.05 இனி யார் ஞானங்களால்

பாசுரம்:

இனியார் ஞானங்களா லெடுக்க லெழாதவெந்தாய்
கனிவார் வீட்டின்பமே! யென்கடற் படாவமுதே
தனியேன் வாழ்முதலே! பொழிலேழு மேனமொன்றாய்
நுனியார்க் கோட்டில்வைத்தா யுன்பாதம் சேர்ந்தேனே

குரல்  ஒலி :

Translation:

Intellect can't fathom thou, devoid of devotion!
To the  pious - nectar -pure and chaste - in delectation!
Bedrock of this hermit! As a Boar thy bore
The cosmos Upon Thy tusk - O! To Thy feet, I restore!

Audio:

பதம் பிரித்தது:

இனியார் ஞானங்களால் எடுக்கல்எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ்முதலே!! பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுனபாதம் சேர்ந்தேனே.

பொழிப்புரை:

எத்தகைய பெரியோர்களுடைய ஞானங்களாலும் அளவிட்டு அறிய முடியாதபடி இருக்கின்ற என் நாயனே! பத்தி நிறைந்து அதனால் கனிந்த மனம் உடையவர்களுக்கு மோக்ஷ சுகமானவனே! எனக்குக் கடலில் உண்டாகாத அமிர்தம் போன்றவனே! யான் பெற்ற இப் பேற்றுக்கு மூல காரணம் ஆனவனே! உலகங்கள் ஏழனையும் ஒப்பற்ற வராக அவதாரமாகிக் கூர்மை மிக்க தந்தத்தில் வைத்துத் தூக்கி வந்தவனே! இப்பொழுது உன்னுடைய திருவடிகைளைச் சேர்ந்ததேனே அன்றோ?

Transliteration:

iniyAr gnAnanggaLA ledukkalezhAtha venthAy
kanivAr vIttinbamE! yen kadaRppadA vamuthE
thaniyEn vAzhmudhalE!! pozhilEzhum yEnamondrAy
nuniyArkOttil vayththa yunapAdham dErnthEnE.

பன்னிராயிரப்படி பதவுரை: (Word by word meaning as per 12000 Padi vyakyaanam)






























































































அவதாரிகை:அநந்தரம், உன்னுடைய அப்ப்ராகிருத போக்யதையைக் காட்டி ருசி ஜனகனானபடியால் உன் திருவடிகளைப் பெற்றேனல்லேனோ? என்கிறார்
யார்எத்தனையேனும் அதிஸயிதரரானார்களுடைய
ஞானங்களால்ஜ்ஞானங்களால்
எடுக்கல்எடுக்கைக்கு
எழாதஎடுப்புண்ணாத
கனிவார்(உன் பக்கல் ஸ்நேஹத்தாலே)பரிபக்வ ஹ்ருதயரானவர்களுக்கு
வீட்டின்பமேமோக்ஷானந்தபூதனாய்
என்(உபய வ்யாவ்ருத்தனான) எனக்கு (மதனாதியத்நத்தால்)
கடல்கடலிலே
படாஉண்டாகாத
அமுதே(அப்ப்ராக்ருதமான) அம்ருதமாய்
தனியேன்(சம்சாரத்திலே பொருந்தாமையாலே) தனியனான என்னுடைய
வாழ்(த்வதனுபவ ரூபமான) வாழ்வுக்கு
முதலே(ருசிஜனகத்வாதியாலே) ப்ரதமஹெதுபூதனாய் (என்னை ஸம்ஸாரார்ணவத்தினின்றும் எடுக்கைக்கு ஸுசகமாக)
பொழிலேழும்ஸப்தத்வீபயுக்தமான ஜகத்தை
ஒன்றுஅத்விதீயமான
ஏனமாய்மகாவராஹமாய்க்கொண்டு
நுனியார்கூர்மைமிக்க
கோட்டில்கொம்பிலே
வைத்தாய்வைத்தவனே
இனிஇனி (நீயே ஹெதுபூதனாய் நிர்வஹிக்கிற பின்பு)
உன பாதம்உன் திருவடிகளை
சேர்ந்தேனேப்ராபித்தேனேயன்றோ. ஏகாரம் தேற்றம்

No comments :

Post a Comment