4.1.4 நினைப்பான் புகில் - Points to ponder

பாசுரம்:

நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்,
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ.

Audio Introduction:



Click here for an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

To ponder, countless as sand granules on a sea shore,
there were those, who ruled this earth, for aeons before.

But - none we saw - to leave a vestige or last forever.
So worship the feet of the Lord who razed the monster tusker!

பதம் பிரித்தது:

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண் மணலிற்பலர்,
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்,
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ.

பொழிப்புரை:

நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்

விளக்கம்:

1. ‘நினைப்பான் - வினையெச்சம்.
2. எக்கல் - மணல் மேடு.
3. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க.
4. மனைப்பால் - மனை இடம்
5. மனைப்பால் மருங்கற மாய்தல் - refers to leaving no trace / vestige after death

No comments :

Post a Comment